சென்னை: சட்டப்பேரவையில் நேற்று உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் (திமுக) பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென்று பேசினேன். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் 8 இடங்கள், 10 இடங்களில் நெல் கொள்முதல் திறந்தாலே பெரிய விஷயம். இப்போது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 188 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு, சன்ன ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.20.60 காசு கொடுக்கின்றது. ஆனால், இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.21.50 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2,160 வழங்கப்பட்டு வருகிறது.