பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் பாதுகாப்பு குறைபாடு?.. தடுப்பை தாண்டி வந்த இளைஞரால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தார்வாட் நகரில் பிரதமர் மோடி காரில் ஊர்வலம் சென்றபோது தடுப்பை தாண்டி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தார்வாட் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் பேரணியாக சென்றார். ஏராளமான போலீஸ், எஸ்.பி.ஜி, பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது. பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரை பிடித்து கர்நாடக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: