சண்டிகர்: பஞ்சாபில் இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று தொடங்கவுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமிர்தசரஸ் பொற்கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். த்தரப்பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த வியாழனன்று அரியானாவின் பானிப்பட்டில் நுழைந்தது. அரியானாவில் ஒற்றுமை பயணம் அம்பாலா மாவட்டத்தில் நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று பிற்பகல் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர்.