சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருவதால், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின் போது, தமிழ்நாடு, அரசியல் தலைவர்கள் பெயர்களை புறக்கணித்தார். இதனால், தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகள் நடந்து வருகிறது. அதேபோல், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
