மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசை வழங்காத கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.