அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசை வழங்காத கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசை வழங்காத கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவு படி தனக்கு முதல் பரிசு வழங்கவில்லை என கூறி, பரிசினை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கண்ணன்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் கீழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறபித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Stories: