திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று(16ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.