திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் மும்முரம்

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று(16ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு சூரியூர் பெரிய குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி 16ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளாக விழா மேடை மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: