ரோசப்பட்டு வெளியேறுவாரா ஆளுநர்?- மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ஆளுநர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாதது குறித்து மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில்; கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: