தண்டையார்பேட்டை: அண்ணியுடன் தனியாக இருந்ததை பார்த்து, கொழுந்தன் தாக்கியதில் படுகாயம் அடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (40), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த வேலு என்கிற தங்கவேலு (34) சென்றுள்ளார். மணிகண்டனை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவர், எதற்காக என் அண்ணன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டு மணிகண்டனை அடித்துள்ளார்.