புதுடெல்லி: மென்பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7வது டிஜிட்டல் இந்தியா விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு 22 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது.