மயோசிடிஸ் பாதித்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றார் சமந்தா

சென்னை: நடிகை சமந்தா நீண்ட நாட்களுக்கு பின்பு விமான நிலையத்துக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது. சமந்தா விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் வந்ததால் தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்வதாக தகவல வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமந்தா நேற்று மும்பை விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. ஸ்டைலான உடையில் அவர் மெதுவாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்து சமந்தா ரசிகர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர். சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து’ தெரிவித்தும் வருகின்றனர்.  

பாலிவுட் வெப் சீரிஸ் சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமந்தா மும்பை வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்கள் முன்பு இந்த வெப் தொடரில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தரப்பினர் அந்த தகவலை மறுத்தனர். நடிகை சமந்தாவின் யசோதாவுக்குப் பிறகு சகுந்தலம் படம் வர உள்ளது.  மறுபுறம் குஷி தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். விரைவில் குஷி படத்தின் மற்றொரு ஷெட்யூலிலும் அவர் இணைகிறார். ஷிவா நிர்வாணா இயக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார்.

Related Stories: