சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.!

சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி 4000 பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 4000 பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 06.01.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45,000க்கு மேற்பட்ட  பொதுமக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வழங்கவுள்ளார்கள். மேலும் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும்  பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் புத்தாடைகளை வழங்குகிறார்கள்.

நேற்று 06.01.2023 நடைபெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்குப்பட்ட புதுப்பேட்டை நாராயண நாயக்கர் தெரு, ராயப்பேட்டை நைனியப்பன் தெரு, சுப்பராயன் தெரு சந்திப்பு, ராயப்பேட்டை பூரம் பிரகாசம் தெரு, மயிலாப்பூர் சிஐடி காலனி காட்டு கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 4000 பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories: