சென்னை: செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்கரனை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கைது செய்திருந்தது. பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.