நாகர்கோவில் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரம் பகுதியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநயினார்குறிச்சி அணி, தூத்துக்குடி, ராமநாபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்ட அணிகள் என மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் திருநயினார்குறிச்சி அணியும், தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல் அணியும் மோதியது.