மாநில கபடி போட்டி திருநயினார்குறிச்சி பெண்கள் அணிக்கு முதல்பரிசு

நாகர்கோவில் :  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரம் பகுதியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநயினார்குறிச்சி அணி, தூத்துக்குடி, ராமநாபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்ட அணிகள் என மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் திருநயினார்குறிச்சி அணியும், தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல் அணியும் மோதியது.

இந்த போட்டியில் 57-14 என்ற புள்ளி கணக்கில் திருநயினார்குறிச்சி பெண்கள் அணி முதல்பரிசை பெற்றது. முதல் பரிசு பெற்ற திருநயினார்குறிச்சி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஆட்டகாரர்களுக்கான பரிசு திருநயினார்குறிச்சி அணி விராங்கனைகள் ஆன்சி, சந்தியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Related Stories: