புதுடெல்லி: பணம் மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். இதே வழக்கில் ெதாடர்புடைய மற்றொரு நடிகை லீனா மரியாவின் 26 கார்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று ஆஜரானார்.