பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்பி

சென்னை: கனிமொழி எம்பி தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, கோவை மேயர் கல்பனா குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதே போல கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், செஞ்சி மஸ்தான், முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், எம்பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவுதம சிகாமணி, கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் தமிழரசி, மார்க்கண்டேயன், சண்முகையா, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம், திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரித்தனர். முன்னதாக கனிமொழி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related Stories: