அயனாவரத்தில் மரம் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மரம் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, அயனாவரம் வட்டம், பெரவள்ளூர் கிராமம், ஜிகேஎம் காலனி, 26வது கென்னடி தெருவைச் சேர்ந்த சாதிக் பாஷா (54) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: