திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு ‘இதி ஏமி கர்மா’ என்ற மாநிலம் முழுவதும் ஜெகன் அரசை கண்டித்து பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நடத்தி வந்தார். இதேபோல் கடந்த வாரம் நெல்லூர் மாவட்டம் கந்துகூரில் நடந்த உதவிகள் வழங்கும் விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் இறந்தனர். அதேபோல் கடந்த 31ம்தேதி குண்டூரில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் இறந்தனர். இதற்கு முதல்வர் ஜெகன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நடத்த தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டார்.