ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி மேற்கு பகுதி 175வது (அ)வட்ட திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆதம்பாக்கம் மோகனபுரி 1 வது தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு 175வது (அ)வட்ட செயலாளர் வி.சக்திவேல் தலைமை வகித்தார். மேற்கு வேளச்சேரி பகுதி திமுக செயலாளர் அரிமா சு.சேகர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், சேப்பாக்கம் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.