டெல்லி: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனியார் வங்கிகளின் நிகர லாபம் 25% வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனா பேரிடரிலிருந்து தொழில் துறைகள் மீண்டதால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடன் தேவைகள் பன்மடங்கு அதிகரித்தன. வீடு, வாகனங்கள், தனிநபர் கடன்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தனியார் துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதா அளவுக்கு கடன் விநியோக சந்தையை விரிவுபடுத்தின.