தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

Related Stories: