போடி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் இருபோகம் நெல்சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சின்னமனூர் பகுதியில் ஒருபோக நெல் சாகுபடி பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முடிந்தது. அதன்பிறகு, இரண்டாம் போகம் நடவு பணிகளுக்கு போதுமான பாசனநீர் இருந்ததால், கடந்த நவம்பர் இரண்டாம் வாரத்தில் விவசாயிகள் நாற்றாங்கால் பாவி 25 நாட்களில் வளர்த்து எடுத்து, நடவு பணியை துவங்கினர்.