ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய பயங்கரவாதியை தீவிரமாக தேசி வந்தனர்.