புதுடெல்லி: தவறாக காட்டப்பட்டுள்ள இந்திய வரைபடத்தை உடனே சரி செய்யும்படி வாட்ஸ்அப் நிறுவனத்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “இந்தியாவில் வணிகம் செய்து வரும், தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சரியான புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்.