மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் தோட்ட வேலை பணியில் ஈடுபட்ட ஒரு கைதி, மற்ற கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை வெளிநபர்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் எதிரொலியாக மதுரை மத்திய சிறை வளாகத்தில் விதிகளை மீறி போதைப் பொருட்கள், புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை நகரை சேர்ந்த 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை 4 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.