சென்னை: பத்மாவதி தாயார் கோயிலுக்கு மார்ச் 17ம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஏ.ஜெ.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஏ.ஜெ.சேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புத்தாண்டு அன்று ஜனவரி 1ம் தேதி சிறப்பு தரிசனத்திற்காக அதிகாலை 3 மணியாளவில் கோயில் திறக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ரூ.50க்கான 40 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் ஏகாதசி அன்று வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் சிறிய அளவிலான லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பத்மாவதி தாயார் கோயிலுக்கு மார்ச் 17ல் குடமுழுக்கு தி.நகர் திருப்பதி கோயிலில் புத்தாண்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் பேட்டி
- பத்மாவதி அம்மாள் கோயில்
- குடமுசுகு டி நகர் திருப்பதி கோயில்
- புதிய ஆண்டு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- ஏ ஜே ஷேகர்