காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.66 லட்சம் வசூல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அத்திவரதர் புகழ்பெற்ற இக்கோயில் உள்பிரகாரத்தில் உள்ள 5 உண்டியல்கள் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோயில் செயல் அலுவலர்கள் வேதமூர்த்தி, தியாகராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் சி.பிருத்திகா ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள்  எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  இதில், ரூ.65 லட்சத்து 64 ஆயிரத்து 158 ரொக்கப்பணமும், 211.300 கிராம் தங்கமும், 450.600 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Related Stories: