கூடலூர்: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் மற்றும் சொகுசு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று கூடலூர் நெடுஞ்சாலைத்துறை ஓய்வு விடுதியில் கோவையில் இருந்து வந்த சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற நாளில் அங்கிருந்த நபர்கள், அதிகாலை நேரத்தில் 2 கார்களில் கூடலூர் வழியாக கேரளா சென்றதாக தெரிகிறது. இதில், ஒரு காரில் வந்த நபர்களை கூடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சோதனை செய்து விசாரித்ததாக தெரிகிறது.