தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கிறிஸ்துமஸ் பண்டிகையினைத் தொடர்ந்து, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருக்கின்றது. இவற்றை எல்லாம் சிறப்பாகக் கொண்டாட ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அரசு தரப்பில் தற்போதைய மவுன நிலை நீடித்தால், கட்டணம் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டணத்தை முறைப்படுத்தவும், தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைத் தடுக்கவும், அதிக அளவிலான அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: