சென்னை: போராடுவதால் பலம் கிடைக்கிறது. அதனால் போராடிக் கொண்டே இருக்கிறேன் என்றார் நடிகை சமந்தா. மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக அவர் படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை. இந்தியில் ஆயுஷ்மான் குரானா ஜோடியாக நடிக்க இருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். தெலுங்கில் குஷி படம் அவருக்காக தள்ளிப்போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். இப்போது மீண்டும் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்கோவின் காவிரி படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவரும் பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன், சமந்தாவுக்காக ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.