பராமரிப்பு பணி காரணமாக வேளச்சேரி இந்து மயான பூமி தற்காலிகமாக செயல்படாது: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி இந்து மயான பூமி தற்காலிகமாக செயல்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு 172ல் உள்ள வேளச்சேரி இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை 10 நாட்களுக்கு மயான பூமியின் எரிவாயு தகன மேடை இயங்காது.

எனவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு, 178க்குட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் மயானபூமி அல்லது ஆலந்தூர் மண்டலம் வார்டு 163க்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயானபூமி ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: