சென்னை: செங்குன்றம் பகுதியில் இருந்து 33 பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றனர். தரிசனம் முடித்துவிட்டு, மயிலம் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டனர். வேனை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாலு மகன் வெங்கடேசன் (35) ஓட்டினார். திண்டிவனம் கருணாவூர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த மற்றொரு வேன், சாலையில் கவிழ்ந்த வேன் மீது மோதியது.