கலெக்டர் அலுவலகம் முன் 5ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை:ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து ஜாக்டோ -ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும்  பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலை படித்தொகையை வழங்க வேண்டும்,

அரசு துறைகளில் ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 5ம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராத பட்சத்தில் வரும் ஜனவரி 8ம் தேதி மதுரையில் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறும்.

Related Stories: