மதுரை: மதுரையில் பார் கவுன்சில் கிளை அமைக்கக் கோரிய மனு தள்ளுபடியானது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வக்கீல் எஸ்.எம்.ஆனந்தமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் சங்க அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. சட்டப்படிப்பை முடித்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களை வழக்குரைஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் சென்னைக்கு தான் செல்ல வேண்டும். நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.