திமுக ஆட்சி குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்ட தனியார் நிறுவன மேலாளர் கைது

சென்னை: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கடிநெல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமரன் (51). இவர் அமமுகவில் சுற்றுச்சூழல் அணியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் திருப்போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திமுக ஆட்சி குறித்து தினமும் முகநூலில் அவதூறு பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், வேதாரண்யம் நகர திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபிகிருஷ்ணன் என்பவர் வேதாரண்யம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வேதாரண்யம் போலீசார் செந்தில்குமரன் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் பிரிவின் கீழ், வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை திருப்போரூர் சான்றோர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வேதாரண்யம் நகர காவல் நிலைய எஸ்ஐ கலியபெருமாள், எஸ்எஸ்ஐ அன்பழகன் ஆகியோர் செந்தில்குமரனை கைது செய்து வேதாரண்யத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: