சென்னை: சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தியும், தமிழில் மிகவும் புலமைப் பெற்றவரும் மற்றும் இசையாசிரியருமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இன்று (26.12.2022) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.