சென்னை: சுனாமி தாக்குதலின் 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவொற்றியூர் அருகே ராமகிருஷ்ணா நகர் கடற்கரை பகுதியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று, உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.