ஒசூர்: ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கெலமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒசூர் நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. கெலமங்கலம் அருகே பேருந்து சென்றபோது எதிரே வந்த பேருந்து மீது மோதாமல் இருக்க தவிர்த்தபோது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.