சென்னை: அதிமுகவிற்கும், எனக்கும் எந்தவித சொந்தமும் இல்லை என யாராலும் கூற முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.