அதிமுகவிற்கும், எனக்கும் சொந்தமில்லையா?..சசிகலா ஆவேசம்

சென்னை: அதிமுகவிற்கும், எனக்கும் எந்தவித சொந்தமும் இல்லை என யாராலும் கூற முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் வி.கே.சசிகலா கூறியிருப்பதாவது: அதிமுகவிற்கும், எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது. மேலும், அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, தொண்டர்களின் முடிவு அடிப்படையிலேயே எல்லாம் நடக்கும்.

Related Stories: