ரஷ்யாவில் தீ விபத்து: 22 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு கிழக்கே 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கெமரோவாவில் சட்ட விரோதமாக தங்கும் விடுதி இயங்கி வந்துள்ளது. இது முதியோர் காப்பகமாகவும் இயங்கி வந்ததாக தெரிகிறது. இங்கு நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வௌியாகவில்லை. விபத்து ஏற்பட்ட விடுதியை வாடகைக்கு எடுத்தவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பாதுகாப்பு விதிகளை மீறியதாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: