நாகப்பட்டினம்: புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. நாகூரில் உள்ள பிரசித்திபெற்ற தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று இரவு தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு நாகையில் இருந்து முக்கியவீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக நாகையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.