தியாகராய சாலை, ஹபிபுல்லா சாலையில் நாளை முதல் 31ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: தியாகராய சாலை, ஹபிபுல்லா சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் 31ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் பணிக்காக மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமணி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை மேற்கொள்ள  உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தியாகராய சாலை, ஹபிபுல்லா சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் 31ம் தேதி வரை சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து  மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் சாலையில் தியாகராய கிராமணி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமணி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம்  மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம். வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: