அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை 3 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகள் வரை குத்தகை விட அனுமதி: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை 3 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகள் வரை குத்தகை விட அனுமதி அளித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், 1959 தமிழ்நாடு இந்து சமய அறநிலையக்கொடைகள் சட்டப்பிரிவு 3460 கீழ் ஏற்படுத்தப்பட்ட அறநிலையங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை குத்தகைக்கு விடுதல் விதிகளில், விதி 2-ன்படி சொத்துக்களை பொது ஏலத்தில் மட்டுமே குத்தகைக்கு விடப்பட வேண்டும். மேற்கண்ட விதிகளில், விதி 12ன் படி 5 ஆண்டுகளுக்கு குறைவாக பொது ஏலத்தில் குத்தகைக்கு விட திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வரை குத்தகையினை நீட்டிப்பு செய்திட ஆணையரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடுவதற்கு சட்டப்பிரிவு 34-ல் தெரிவிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் 2. தற்போது அசையாச் சொத்துக்களின் குத்தகை உரிமம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் திருக்கோயில் நிர்வாகிகளால் பொது ஏலம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சொத்தினை பொது ஏலத்தில் குத்தகை உரிமம் பெற்ற குத்தகைதாரர்கள், சொத்தினை முழுமையாகப் பயன்படுத்திட தேவையான கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி குத்தகைதாரரால் பயன்படுத்துவதற்குள் குத்தகை காலம் முடிவடைந்து விடுவதால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டால் மட்டுமே குத்தகை சொத்தினை முழுமையாக குத்தகைதாரரால் பயன்படுத்த இயலும் என கோரிக்கை வரப்பெறுகிறது.

மேலும், 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்தினை காலி செய்து சுவாதீனம் பெற்று பொது ஏலம் மூலம் அறநிறுவனங்களின் நிர்வாகத்தால் மீண்டும் குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சொத்தினை சுவாதீனம் பெற இயலாத நிலை ஏற்படுகிறது. 3. அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் வழங்கினால் மட்டுமே, குத்தகைதாரர் அவரது பயன்பாட்டிற்கேற்ப தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு சொத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

மேலும், சொத்தினை மேம்படுத்துவதற்காக குத்தகைதாரர்களால் செலவிடப்படும் தொகை அறநிறுவனங்களால் திரும்ப வழங்க இயலாது என்பதாலும், கட்டுமானப் பணிகளுக்காக அவர்களால் முதலீடு செய்யப்பட்ட தொகையினை திரும்பப் பெறும் கால அளவிற்கேற்ப குத்தகை காலம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் மேற்கண்ட சொத்திலிருந்து அறநிறுவனங்களுக்கு வரவேண்டிய வருவாய் முழுமையாக வருவதை உறுதி செய்யப்பட வேண்டும். 4. எனவே, அறநிறுவனங்களின் நன்மை கருதியும், குத்தகைதாரர்களின் கோரிக்கையினை பரிசீலித்தும், அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

Related Stories: