பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகில் பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு தலைவரும் நகர திமுக செயலாளருமான வே.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, திமுக கொடியேற்றி பேராசிரியர் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், “பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டு கோளுக்கிணங்க பல்லாவரத்தில் இருந்து பம்மல் மார்க்கமாக குன்றத்தூர் செல்லும் பிரதான சாலை விரைவில் 100 அடி சாலையாக மாற்றப்படும்.