திருவொற்றியூர்: மாவரத்தில் நாளை நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில், எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சமத்துவ மக்கள் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், நாளை மாலை 5 மணிக்கு எம்எம்டிஏ முதல் மெயின் ரோடு பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு, மாவட்ட செயலாளர் விஜயன் தலைமை வகிக்கிறார்.
