திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தரிசனத்திற்கு வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் என வருகிற 22ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.