மதுரை: காப்பீடு திட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஏழை. எளிய மக்களின் நலனுக்காக அரசு தரப்பில் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை வழங்குவதில்லை. இதனால் பல கோடிகளை செலவிட்டும் திட்டத்தின் நோக்கம் முறையாக நிறைவேறாமல் போகிறது. எனவே, அரசின் காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கவேண்டும் என்றும், வழிகாட்டுதல்களை பின்பற்றாத மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.