திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 24வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சேவா சங்கத்தின் குருசுவாமிகள் எஸ்.ராஜ்குமார், ஏ.ருக்மாங்கதன், எஸ்.கோபாலகிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் ஏற்பாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதில், கல்வி, திருமண தடை, வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம், உலக நன்மை போன்ற எந்த வேண்டுதலாக இருந்தாலும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.