புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 2வது தேசிய மாநாடு ஜன.5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி தலைமையில் கடந்த் ஜூன் மாதம் தலைமை செயலாளர்களின் முதல் தேசிய மாநாடு தர்மசாலாவில் மூன்று நாட்கள் நடந்தது.