பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்களின் 2வது தேசிய மாநாடு: ஜன.5 முதல் 2 நாட்கள் நடக்கிறது

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 2வது தேசிய மாநாடு ஜன.5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி தலைமையில் கடந்த் ஜூன் மாதம் தலைமை செயலாளர்களின் முதல் தேசிய மாநாடு தர்மசாலாவில் மூன்று நாட்கள் நடந்தது.

இந்நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி தலைமை செயலாளர்களின் 2வது தேசிய மாநாட்டை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு ஜன. 5ம் தேதி 7ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 2வது தேசிய மாநாடு நடக்க உள்ளது. இதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களை சேர்ந்த  தலைமை செயலாளர்கள் மற்றும் இளம் கலெக்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

Related Stories: