சென்னை: முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவை போற்றும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை’, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில், கடந்த 1922ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்தவர் க.அன்பழகன். இவர் கடந்த 1944ம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் கடந்த 1944ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை துணைப் பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் அவர் திமுக சார்பில் 1962ம் ஆ ண்டு சட்ட மேலவை உறுப்பினராக செங்கல்பட்டு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்
- பேராசிரியர்
- அன்பழகன்
- நூற்றாண்டு ஆர்க்
- நுங்கம்பாக்கம் பள்ளிவாசல் வளாகம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்