புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருக்கிறார்.
2011ல் மாநில அந்தஸ்து பெறுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். 2021ம் ஆண்டு பஜகவுடன் கூட்டணி வைத்தபோது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்துதான் முதல் கோரிக்கையாக ரங்கசாமி வைத்திருந்தார்.